ஆசாராம் பாபு, மகன் மீது சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்கார புகார்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: மதகுருவான ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சகோதரிகள் இருவர் புகார் அளித்தனர்.

மதகுருவான ஆசாராம் பாபு மீது 16 வயது சிறுமி பாலியல் புகார் கொடுத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து புகார் கொடுத்த அந்த சிறுமிக்கு மனநிலை சரியில்லை என்று ஆசாராமின் மகன் நாராயண் சாய் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆசாராம் பாபுவும், அவரது மகனும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சகோதரிகள் இருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆசாராம் மூத்த சகோதரியை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் வைத்து சீரழித்துள்ளார். அவரது மகன் நாராயண் சாய் இளைய சகோதரியை 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுக்குள் இடைப்பட்ட காலத்தில் சூரத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

Asaram, his son Narayan Sai booked for raping two sisters

அவர்களின் புகாரின்பேரில் போலீசார் ஆசாராம் பாபு மற்றும் நாராயண் சாய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக நாராயண் சாய் திருமணமான பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.

ஆசாராம் பாபு கடந்த மாதம் 2ம் தேதி முதல் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+