வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்ரீரங்கத்தில் நிறுத்த கோரிக்கை: ரயில்வே அமைச்சரை சந்தித்த ஆசிர்வாதம் ஆச்சாரி
டெல்லி: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்ரீரங்கத்தில் தினசரி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் மிகப்பெரிய புனித ஸ்தலம். ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பெரும்பாலும் ஸ்ரீரங்கம் வந்து செல்ல பக்தர்கள், பொதுமக்கள் ரயிலை பயன்படுத்துகின்றனர். எனவே ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
பகல் நேரத்தில் சென்னையில் இருந்து செல்லும் குருவாயூர் ரயில் நின்று செல்கிறது. ஆனால் சென்னை- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் நின்று செல்வதில்லை. விழாக்காலங்களில் மட்டுமே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கிறது.
இதனால் சென்னையில் இருந்தும், மதுரையில் இருந்தும் பகல் நேரங்களில் ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கான வசதியை ஆய்வு செய்வதற்கான குழு உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி இன்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் தினசரி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆசிர்வாதம் ஆச்சாரி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்தவர். திருச்சியை சேர்ந்த இவர் மத்திய அரசு பணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். தகவல் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அவருக்கு சீனியர் பி.ஏ.வாகவும் பணியாற்றினார்.
பின்பு மத்திய ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றினார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது, சுப்பிரமணியசாமி வழிகாட்டுதலில் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் வகுக்கும் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
இவர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு ஆகியோருக்கு எதிரான முக்கிய அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரயில் பயணிகளுக்கான வசதியை ஆய்வு செய்வதற்கான குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த ஆசிர்வாதம் ஆச்சாரி.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications