அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை.. பெற்றோருக்காக அஸ்ஸாம் அரசு அசத்தல் முடிவு
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில அரசு அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை தந்து அசத்தி உள்ளது. பெற்றோர் மற்றும் தனது வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது அலுவலக எக்ஸ் பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அஸ்ஸாம் மாநில அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் தனது வாழ்க்கைத் துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க ஏதுவாக 2 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படுகிறது.

அதேநேரம், இந்த விடுப்பை வயதான பெற்றோருடன் நேரத்தை செலவழிக்கவும், அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே அரசு ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட கொண்டாட்டத்துக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது.
இந்த தற்செயல் சிறப்பு விடுப்பு எப்போது: வரும் நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. இதற்கு நடுவே, நவம்பர் 7-ம் தேதி சத் பூஜை, 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் பெற்றோருடன் செலவிட வேண்டும்.
அத்தியாவசிய சேவை துறைகளைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் வேறு நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பெற்றோர் இல்லாதவர்கள் இந்த விடுமுறையை அனுபவிக்க முடியாது" இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications