ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு
டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் இன்று காலை டெல்லியில் கூடி தேர்தல் தேதிகளை முடிவு செய்தனர். பின்னர் மாலையில் தேர்தல் தேதிகளை சம்பத் அறிவித்தார்.
90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் நவம்பர் 11, 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ம் தேதியும், 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் டிசம்பர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்திலும் டிசம்பர் 4ம் தேதியே தேர்தல் நடக்கவுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
5 மாநிலங்களிலும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
இந்த 5 மாநிலங்களிலும் 11 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 1,30,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலமான சட்டீஸ்கரில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்தல்கள் அடுத்தாண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையவுள்ளன.

மிசோரம் தவிர்த்த மற்ற 5 மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி மோதல் நடக்கவுள்ளது.
இதில் ராஜஸ்தான், டெல்லி, மிசோரம் மாநிலங்களில் காங்கிரசும், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜகவும் ஆட்சியில் உள்ளன.
தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்னதாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவது தடை செய்யப்படும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications