பிளஸ் டூ தேர்வில் மகனை விட அதிக மார்க் வாங்கிய 37 வயது தாய்
டிஸ்புர்: அஸ்ஸாமில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 37 வயது பெண் தனது மகனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திகோவ்கினார் சாங்மைகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் நயன்மோனி பெஸ்பருவா(37). காய்கறி விற்பவரின் மனைவி. நயன்மோனிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நயன்மோனி தினமும் காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் 12 கிலோமீட்டர் சைக்கிளை அழுத்தி கோவங் பிதுபோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.

இந்நிலையில் அவரது மூத்த மகன் அங்கூர்(18) தந்தைக்கு உதவியாக காய்கறி விற்பனை செய்து கொண்டே படித்தார். தாயும், மகனும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் நயன்மோனி 69.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் அவரது மகனால் தேர்ச்சி பெறும் அளவுக்கு மட்டுமே மதிப்பெண்கள் பெற முடிந்தது.
தான் நல்ல மதிப்பெண்கள் பெற்றபோதிலும் மகன் குறைவாக மதிப்பெண்கள் பெற்றுள்ளதை நினைத்து நயன்மோனி கவலையில் உள்ளார். 18 வயதில் திருமணமான நயன்மோனி உள்ளூரில் உள்ள பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளில் தனது குழந்தைகளை பங்கேற்க வைத்துள்ளார். அவரது ஆர்வத்தை பார்த்த ஆசிரியர்கள் அவரை மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்குமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து அவர் கடந்த 2013ம் ஆண்டு தனது மகனுடன் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார். இருவரும் செகண்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications