இலவச கண் சிகிச்சை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 60 பேர் பார்வை இழப்பு - பஞ்சாபில் அதிர்ச்சி!
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பார்க்கும் திறனை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் குமன் கிராமத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. இந்த முகாமில் 62 நோயாளிகளுக்கு கண் புரை அறுவைச் சிகிச்சையும் செய்யப் பட்டது. இவர்களில் 15 பேர் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், தங்களது பார்க்கும் சக்தியை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட சுகாதாரமற்ற கருவிகளே இதற்குக் காரணம் என பாதிக்கப் பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.
பார்வை இழந்தவர்கள் அனைவருக்கும் மீண்டும் பார்வையை கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கி இருப்பதாக பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அமிர்தசரஸ் நகரின் துணைகமிஷனர் ரவி பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் சட்டீஸ்கரில் நடத்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் பதினான்கு பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் 60 பேர் பார்வை இழந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications