இலவச கண் சிகிச்சை முகாமில் ஆபரேஷன் செய்து கொண்ட 60 பேர் பார்வை இழப்பு - பஞ்சாபில் அதிர்ச்சி!
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பார்க்கும் திறனை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் குமன் கிராமத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. இந்த முகாமில் 62 நோயாளிகளுக்கு கண் புரை அறுவைச் சிகிச்சையும் செய்யப் பட்டது. இவர்களில் 15 பேர் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், தங்களது பார்க்கும் சக்தியை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட சுகாதாரமற்ற கருவிகளே இதற்குக் காரணம் என பாதிக்கப் பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.
பார்வை இழந்தவர்கள் அனைவருக்கும் மீண்டும் பார்வையை கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கி இருப்பதாக பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அமிர்தசரஸ் நகரின் துணைகமிஷனர் ரவி பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் சட்டீஸ்கரில் நடத்தப்பட்ட முகாமில் கலந்து கொண்டு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் பதினான்கு பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் 60 பேர் பார்வை இழந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications