பதன்கோட் தாக்குதல்: 2வது நாளில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை.. மொத்தம் 5 பேர் வீழ்த்தப்பட்டனர்
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நகரில் உள்ள விமானப்படைத் தளத்திற்குள் புகுந்த தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி இன்றும் தொடர்ந்தது. நேற்று 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இன்னும் ஒருவன் உள்ளே பதுங்கியுள்ளான். அவனை உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 தீவிரவாதிகள் உள்ளே பதுங்கியிருப்பதை எல்லைப் பகுதி டிஐஜி கன்வர் விஜய் பிரதாப் சிங் முன்பு உறுதிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது மேலும் 2 பேர் உள்ளே உள்ளனர். அவர்கள் தரப்பிலி்ருந்து பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டு வருகின்றனர். இருப்பினும் இருவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருகின்றனர் என்றார் சிங்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மகரிஷி செய்தியாளர்களைச் சந்தித்து பதன்கோட் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜனவரி 1ம் தேதி தீவிரவாதிகள் ஊடுறுவல் தொடர்பாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து மாநிலப் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தீவரவாதிகள் யாரும் தப்பி ஓடி முடியாத அளவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால்தான் தாக்குதல் நடத்த துணிந்த தீவிரவாதிகளால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
உளவுத்துறை தகவல் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால்தான் வேகமாக செயல்பட முடிந்தது. தற்போது 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தற்போது தீவிரமாக உள்ளது. நாளை வரை இது தொடரும்.
நமது தரப்பில் 12 என்எஸ்ஜி கமாண்டோக்கள் காயமடைந்துள்ளனர். ராணுவ, விமானப்படை தரப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர். என்எஸ்ஜியைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் நிரஞ்சன் உயிரிழந்துள்ளார். விமானப்படைத் தரப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி 2ம் தேதி தீவிரவாதிகளை வான்வழி கண்காணிப்பின் மூலம் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் நமது வேலை எளிதாக போய் விட்டது.
தீவிரவாதிகளின் முக்கிய நோக்கம், விமானப்படைத் தளத்தை தகர்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவது. ஆனால் அது தகர்க்கப்பட்டு விட்டது. நமது தளத்திற்கு ஒரு சேதமும் இல்லை. சின்ன அளவிலான சேதம் கூட ஏற்படவில்லை.
உளவுத்துறையும், பாதுகாப்புப் படைகளும் இணைந்து செயல்பட்டதால்தான் சிறிய அளவிலான சேதம் கூட இல்லாமல் நாம் பார்த்துக் கொள்ள முடிந்தது என்றார்.
கையெறி குண்டுகள்
இதற்கிடையே, விமானப்படை நிலையத்திற்குள் கையெறி குண்டுகளை தீவிரவாதிகள் போட்டு வைத்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒன்றுதான் இன்று காலை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமான தளத்திற்குள் வெளியேயும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications