முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு எய்ம்ஸில் தொடர் சிகிச்சை.. ராஜ்நாத் சிங், அமித் ஷா நலம் விசாரித்தனர்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார்கள்.
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார்கள்.
பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பொது வாழ்க்கையை விட்டு மொத்தமாக விலகி உள்ளார். இவரது உடல் அரசியல் வாழ்விற்கு ஒத்துழைக்காத காரணத்தால், மொத்தமாக அரசியலில் இருந்து விலகி உள்ளார்.

93 வயது நிரம்பியுள்ள இவருக்கு தற்போது சர்க்கரை வியாதி இருக்கிறது. ஒரு கிட்னி செயலிழந்த நிலையில் ஒரு கிட்னி மட்டுமே இவருக்கு இயங்குகிறது. அதேபோல் கடந்த 2009ல் இவருக்கு முதல் மாரடைப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் உடலில் சில சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், வாஜ்பாயை பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று நேரில் சந்தித்து இருக்கிறார்கள். நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்துள்ளது.
ஆனால் இதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் இதுகுறித்த அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications