10 ராணுவ வீரர்களை பலி கொண்ட சியாச்சின்... ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்ததாக புது சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: 10 ராணுவ வீரர்களை பலி கொண்ட இமயமலையின் சியாச்சின் பகுதியில் குறைவான அபாயம் கொண்ட பனிச்சரிவு ஏற்படும் என்று முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பனிச்சரிவு தொடர்பான சண்டிகர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சியாச்சின் பகுதியில் கடந்த 3-ந் தேதியன்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் சிக்கினர்.

Avalanche study centre had issued warning to army on Feb 2

கடந்த 2 நாட்களாக அவர்களை உயிருடன் மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சியாச்சின் பகுதியில் "குறைவான அபாயம் கொண்ட பனிச்சரிவு " இருப்பதாக பிப்ரவரி 2-ந் தேதியன்றே இது தொடர்பான சண்டிகரைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.இ. என்ற ஆய்வு மையம் ராணுவத்துக்கு எச்சரிக்கை கொடுத்திருந்ததாக அதன் இயக்குநர் அஸ்வகோஷா கஞ்சு தெரிவித்திருக்கிறார்.

அதே நேரத்தில் "குறைவான பனிச்சரிவு அபாயம்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததாக என்பது பற்றி தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

10 ராணுவ வீரர்கள் பலியான நிலையில் முன்னெச்சரிக்கையை ராணுவத்தினர் எப்படி அணுகினர் என்பது புதிய சர்ச்சையாக உருவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+