Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திறக்கப்பட்ட ராமர் கோவில்.. நெற்றியில் கவனிச்சீங்களா நாமத்தை! ஆஹா தென்கலையா? என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் கண்கள் திறக்கப்பட்ட ராமரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ராமரின் நெற்றியில் இருக்கும் நாமம் கவனம் பெற்றுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி , உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் முன்னிலையில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.

Ayodhya Ram Mandir inauguration: Is the Ram Statue namam is Vadakalai or Thenkalai?

கோவில்: இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.

சிலை: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் கண்கள் திறக்கப்பட்ட ராமரின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ராமரின் நெற்றியில் இருக்கும் நாமம் கவனம் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலின் கருவறை உள்ளே ராமர் சிலை கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டது. இதன் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

கையில் வில் அம்பு எதுவும் இன்றி சாந்தமான தோற்றத்துடன், கரு நிற கல்லில் இந்த சிலை வைக்கப்பட்டு உள்ளது. சிறுவன் வடிவத்தில் ராமர் சிலை வடிக்கப்பட்டு உள்ளது. இது பாலக ராமர் சிலை வடிவம் ஆகும்.

நாமம்: ராமர் சிலையின் மேல் தென்கலையின் நாமம் போடப்பட்டு உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். சிலர் இது பொதுவான நாமம் என்கின்றனர். பொதுவாக வடமாநிலங்களில் தென்கலை மட்டுமே இருக்கும். வடகலை பிரிவு பெரும்பாலும் தென்னிந்தியாவில்தான் அதிகம் இருக்கும். வடகலை சமஸ்கிருத பாரம்பரியத்தின் அடிப்படையில் வடகலை சம்பிரதாயத்தை ராமானுஜர், வேதாந்த தேசிகர் உருவாக்கினர்.

அதே சமயம் தென் கலை பிரிவு என்பது பிள்ளை லோகாச்சார்யா பொதுவாக தென்கலை பிரிவின் நிறுவனராகக் கருதப்படுகிறார், மணவாள அல்லது வரவர முனி (1370-1443) அதன் மிக முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார்.

வேறுபாடு: இதில் தென்கலை நாமம் ஷார்ப்பாக முடியும். வடகலை நாமம் வளைந்து ஷார்ப் இல்லாமல் முடியும். இப்போது ராமர் சிலையில் நாமம் தென்கலை நாமம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் சிலரோ இது இரண்டும் இல்லை.. நாமம் ஷார்ப்பாக முடியும், வளைவாக முடியாமல் சதுரம் போல முடிகிறது. அதனால் இது பொது நாமம் என்று குறிப்பிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+