பிரதமர் பதவியில் புதிய 'பிரம்மச்சாரி...' நாடு பிரம்மச்சாரிகள் கையில்!
சென்னை: பிரதமர் நாற்காலியில் ஒரு புதிய பிரம்மச்சாரி வருகிறார். திருமணமானவர் என்றாலும் கூட மோடியும் இப்போதும் தனிக்கட்டைதான்.
பாஜகவிலிருந்து பிரதமர் பதவிக்கு வந்துள்ள 2வது பிரம்மச்சாரியும் இவர்தான்.
இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் ஒரு கட்டை பிரம்மச்சாரி. ஆனால் நமது மோடியோ, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
இவரைப் போல நால்வர்...
என்ன விசேஷம் என்றால் மோடியைப் போலவே நான்கு முக்கியத் தலைவர்கள் பேச்சலர்களாக உள்ளனர் என்பதுதான்.
பிரம்மச்சாரிகள் கையில் நாடு
தற்போதைய நிமிடத்தில் நாடு சில முக்கிய பேச்சலர்களின் கையில்தான் உள்ளது.
யார் அந்த நால்வர்..
நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு நீண்ட கால பேச்சலர். டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வகிக்கப் போகும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேச்சலர். திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்னொரு பேச்சலர்.
2வது பாஜக பிரம்மச்சாரி
பிரம்மச்சாரி வாஜ்பாய்க்கு அடுத்து அமையும் பாஜக ஆட்சியிலும் பிரம்மச்சாரி ஒருவர் பிரதமராவது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.