அந்தமானில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்.. அதுவும் கடலுக்கு அடியே.. அச்சத்தில் பொதுமக்கள்! ஷாக்
அந்தமான்: அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் அடுத்தடுத்து கடலுக்கு அடியே ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த பிப். மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. பல ஆயிரம் இந்த மோசமான நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அதன் பிறகு பல்வேறு இடங்களிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டே வருகிறது. இந்தச் சூழலில் அந்தமான் நிகோபார் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்: இப்படி கொஞ்ச நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் கடலுக்கு அடியே ஏற்பட்டதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 4.9, 4.1 மற்றும் 5.3 எனத் தொடர்ச்சியாக 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகலில் சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் மதியம் 1 மணியளவிலும் அதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் அடுத்த இரு பூகம்பங்களும் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவான முதல் நிலநடுக்கம் 1.16 மணியளவில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், 5.3 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கம் 4.01 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை உண்டா: நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாகப் பொதுமக்கள் அஞ்சினர். கட்டிடங்கள் தொடர்ச்சியாகக் குலுங்கியதால், பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏன்: அந்தமான்- நிக்கோபார் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. அது பூமியில் அமைந்துள்ள இடம் காரணமாகவே நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் அது அதிகம் பாதிக்கப்படுகிறது.
அந்தமான் பகுதி இமயமலை மோதல் மண்டலத்தில் ( Himalayan collision zone) அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அது நிலநடுக்க மண்டலத்தில் ஜோன் 5இல் உள்ளது. அதாவது அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications