சாலைகளில் மேடு, குழி, பள்ளங்கள்... 2015-ல் மட்டும் 10,727 பேர் பலி என அதிர்ச்சி தகவல்
புதுடில்லி: நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் மோசமான சாலைககள் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10,727 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகத்தில் சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: மோசமான சாலைகள், சாலை பணிகள் மற்றும் வேகத்தடைகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 10,727 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த உயிரிழப்பானது கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் போது சற்று குறைந்துள்ளது.

மோசமான சாலைகள் காரணமாக மட்டும் ஏற்பட்ட உயிரிழப்புகள் 3,039-ல் இருந்து 3,416-ஆக அதிகரித்துள்ளது. மகராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் மோசமான சாலைகள் காரணமாக ஏற்படும் விபத்துகள் 7 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 124 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு உயிரிழப்பின் எண்ணிக்கை 812-ஆக அதிகரித்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் குறிப்பிடும் படியாக மோசமான சாலையினால் ஏற்படும் விபத்துகள் கடந்த 2014-ம் ஆண்டை ஒப்பிடும் போது, கடந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் டெல்லியில் மோசமான சாலைகளால் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் மேசமான சாலைகள் காரணமாக 10,876 விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக பராமரிக்கப்படாத பாதாள சாக்கடைகளால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதும் பல விபத்துக்களுக்கு காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications