மாடுகளை வெட்ட தடை.. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்
மாடுகளை வெட்ட தடை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று கேரள அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்; மாடுகளை வெட்ட விதித்த தடையை ஏற்க முடியாது என கேரள அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை வெட்ட மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரும்பாலும் கேரள ஓட்டல்களில் மாட்டு இறைச்சி உணவுகள்தான் பரிமாறப்படும்.

தமிழகத்தில் இருந்து தமிழக முக்கிய எல்லை வழியாக இறைச்சிக்காக மாடுகள் கால்நடையாகவும், லாரிகள் மூலமும் அடிக்கடி கொண்டு செல்லப்படுவது வாடிக்கை. குறிப்பாக, செங்கோட்டை-புளியரை எல்லை வழியாக கால்நடையாக அடிக்கடி மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. மாடுகள் வெட்ட தடை என்ற உத்தரவால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள அமைச்சர் சுனில் குமார் கூறியதாவது:
மாடுகளை வெட்ட மத்திய அரசு விதித்த தடையை ஏற்க முடியாது. கால் நடைகள் அறுப்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆர்எஸ்எஸ் கொள்கையை அமல்படுத்ததான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டு மக்களின் உணவு பழக்க வழக்கத்தை கட்டுபடுத்துவது போல் உள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுனில் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications