உ.பி. பாலியல் வழக்கு: பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை?
லக்னௌ: உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களின் பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதான் மாவட்டம், கத்ரா சதாத் கன்ஞ் கிராமத்தைச் சேர்ந்த 14, 15 வயது நிரம்பிய 2 சிறுமிகள் கடந்த மே 27-ம் தேதி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். . இதையடுத்து நடந்த மருத்துவ பரிசோதனையில், அந்த சகோதரிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொதிப்பு
இரு சிறுமிகளுக்கு ஏற்பட்ட இந்த கொடூரம் அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

உண்மை குற்றவாளிகள்
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பில்லை என்றும், எனவே, அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அம்மாநில காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

சிபிஐ விசாரணை
இந்த நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு பரிந்துரைத்தது. அதன்பேரில் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பெற்றோரிடம் சோதனை
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications