சிறப்பு அந்தஸ்து கேட்டு முழு அடைப்பு - ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
சில குறிப்பிட்ட தடங்களில் மட்டும் தற்காலிகமாக சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் பட்டது. மற்றபடி, திருப்பதி - திருமலை உட்பட மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து வழக்கம் போலவே செயல்பட்டது.

நகரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அந்த வழியாக சென்ற ஆந்திர பேருந்தை தாக்கினர். இதனால், அந்த வழியாக ஆந்திர, தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழக பேருந்துகள் அனைத்தும் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும், பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. நண்பகலில் போராட்டம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக மற்றும் ஆந்திர அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
இந்த முழு அடைப்பு போராட்டத்தால் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகள் முன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
நடிகை ரோஜா தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்காணித்தார். அவரோடு திரளான தொண்டர்களும் கூடவே சென்றதால் அவர்கள் போன இடமெல்லாம் பரபரப்பு நிலவியது.
முன்னதாகவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டும், வீட்டு காவலில் அடைக்கப் பட்டிருந்தனர். விசாகப்பட்டணம் மற்றும் விஜயவாடாவில் மட்டும் சுமார் 250 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications