சிறப்பு அந்தஸ்து கேட்டு முழு அடைப்பு - ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
சில குறிப்பிட்ட தடங்களில் மட்டும் தற்காலிகமாக சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் பட்டது. மற்றபடி, திருப்பதி - திருமலை உட்பட மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து வழக்கம் போலவே செயல்பட்டது.

நகரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அந்த வழியாக சென்ற ஆந்திர பேருந்தை தாக்கினர். இதனால், அந்த வழியாக ஆந்திர, தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழக பேருந்துகள் அனைத்தும் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும், பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. நண்பகலில் போராட்டம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக மற்றும் ஆந்திர அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
இந்த முழு அடைப்பு போராட்டத்தால் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகள் முன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
நடிகை ரோஜா தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்காணித்தார். அவரோடு திரளான தொண்டர்களும் கூடவே சென்றதால் அவர்கள் போன இடமெல்லாம் பரபரப்பு நிலவியது.
முன்னதாகவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டும், வீட்டு காவலில் அடைக்கப் பட்டிருந்தனர். விசாகப்பட்டணம் மற்றும் விஜயவாடாவில் மட்டும் சுமார் 250 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications