பெங்களூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பள்ளி வளாகத்தில் 8 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக பெங்களூரிலுள்ள ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் கடந்த மாத துவக்கத்தில், மாரத்தஹள்ளி பகுதியிலுள்ள பள்ளியொன்றில் 6 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஸ்கேட்டிங் பயிற்றுநர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மேலும் 2 உடற்பயிற்சி ஆசிரியர்களும் கைதானார்கள். இந்த சம்பவத்தையடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டது.

Bangalore: 8-year-old girl alleges sexual abuse by teacher

பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக பெங்களூரில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அதேபோன்ற பலாத்கார சம்பவம் பெங்களூரின் தலகாட்புரா காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது. இப்பகுதியின் கனகபுரா ரோடு, குப்பலால் கேட் பகுதியிலுள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் 8 வயது மாணவி ஆசிரியரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.

இதுதொடர்பாக இன்று தலகாட்புரா போலீசில் சிறுமியின் தந்தை அளித்த புகாரை தொடர்ந்து, கவுரவ ஆசிரியராக பணியாற்றிய 63வயதான சந்திரமவுலி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+