பெங்களூரு குண்டு வெடிப்பு: காயமடைந்த மூவரும் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
டிசம்பர் 28ம்தேதி பெங்களூரு எம்ஜிரோடு சர்ச் தெரு பகுதியில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் பவானிதேவி என்ற 38 வயது சென்னை பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பவானி தேவியுடன் நடந்து வந்து கொண்டிருந்த அவரின் மைத்துனர் மகன் கார்த்திக் உடலுக்குள்ளும் இரும்பு துண்டுகள் புகுந்தன. மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கார்த்திக்கின் உடலுக்குள் இருந்து சுமார் ஒரு இன்ச் நீளமுள்ள இரும்பு துண்டு அகற்றப்பட்டது.

அதேபோல சாப்ட்வேர் இன்ஜினியரான சந்தீப் என்பவரும் இந்த தாக்குதலில் காயமடைந்தார். தனது நண்பர்கள் சிலருடன் இரவு சாப்பிட எம்ஜிரோடு வந்தபோது அவரும் குண்டு வெடிப்பில் சிக்கினார். சந்தீப்பின் நண்பர் வினய் என்பவருக்கும் குண்டு வெடிப்பில் காலில் காயம் ஏற்பட்டது. சந்தீப், வினய் மற்றும் அவர்களது நண்பர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சுமார் 15 அடி தொலைவில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது குண்டு வெடித்த இடத்துக்கும், இந்த நண்பர்களுக்கும் நடுவே பவானிதேவியும், கார்த்திக்கும் நடந்து சென்றுள்ளனர். அதே நேரத்தில் குண்டு வெடித்ததால் குண்டில் இருந்து புறப்பட்ட இரும்பு பொருட்கள் பவானியின் மண்டை ஓட்டை உடைத்து உள்ளே புகுந்து அவரது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களை துண்டாக்கியது. இதனால் தலையில் இருந்து ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து தெருவில் ஓடியது.
இவ்வாறு பவானி தேவி குறுக்கே வராவிட்டால் சந்தீப் உள்ளிட்ட நண்பர்கள் அந்த தாக்குதலை தங்களது உடலில் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. குறுக்கே நடந்து சென்ற பவானி தாக்குதலின் முழு பாதிப்பையும் அவருக்குள் ஏற்று உயிரை விட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் சந்தீப் காலுக்குள் 2 செ.மீ நீளமுள்ள இரும்பு துண்டு புகுந்திருந்தது. ஹோஸ்மட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் மூலம் இரும்பு துண்டு அகற்றப்பட்டது. வினய்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. காயமடைந்த மூவருமே அவரவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications