மாணவருக்கு அடி,உதை – தீயாய் பரவும் பெங்களூரு பயிற்சி நிறுவன முதல்வர் வீடியோ
பெங்களூரூ: பெங்களூரில் மாணவர் ஒருவரை நோட்ஸ் எடுக்கவில்லை என கல்வி நிறுவன முதல்வர் அடித்து உதைக்கும் காட்சி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வர் , மாணவரை அடித்து உதைக்கும் காட்சிகள் சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல்வர் அடித்து உதைப்பதை நேரில் பார்த்த மற்றொரு மாணவர் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த இந்த காட்சியை தனது ஸ்மார்ட் போனில் படம் பிடித்து உள்ளார். பின்னர் சேனல்களுக்கும் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், நாங்கள் இந்த முதல்வர் தேவை இல்லை என்று நினைக்கிறோம்.நீங்கள் இந்த வீடியோவை பாருங்கள் ஒருமாணவரை முதல்வர் எவ்வாறு கொடுமை படுத்துகிறார்.
இதுபோல் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை கருதி இது குறித்து யாரிடமும் புகார் கூறவில்லை. ,மாணவர்களை புத்தகம் கொண்டு வரவில்லை, ஷூ அழுக்காக உள்ளது, உடைகளை அயர்ன் செய்து போடவில்லை என்றெல்லாம் கூறி அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.. என்கின்றனர்.
இந்த கல்லூரி எம்எல் ஏ ஒருவரின் அறக்கட்டளை மூலம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஆனால் போலீசில் மாணவர்கள் எந்த வித புகாரும் அளிக்கவில்லை. தற்போது மாணவர்கள் மனித உரிமை ஆணையத்தையும் போலீசாரையும் அணுக முடிவு செய்து உள்ளனர்.
எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை.












Click it and Unblock the Notifications