பெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம்
பெங்களூரு: பெங்களூரு நகரின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெயர் பெற்றழரான பாரதி வீரத் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர் பாரதி. 10 வருடத்திற்கு முன்பு பெங்களூருக்கு இடம் பெயர்ந்தார். நாகஷெட்டி ஹள்ளி பகுதியில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். 2 வருடத்திற்கு முன்பு இவர் உபேர் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக சேர்ந்தார். அதன் மூலம் பெங்களூரு நகரின் முதல் பெண் டாக்சி டிரைவராகவும் இவர் பிரபலமானார்.

39 வயதான பாரதி தனியாக வசித்து வந்தார். அவரா் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டாரா். அவர் தற்கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலைக் கடிதம் எதையும் அவர் எழுதி வைத்திருக்கவில்லை.
அவரது போர்ட் பியஸ்டா கார் அவரது வீட்டுக்கு அருகே தனியாக நின்றிருந்தது. இதுகுறித்து உபேர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் பாரதி. எங்களது பெண் டிரைவர்களிலேயே அவர் மட்டுமே துணிச்சலானவரும் கூட. மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.
பாரதி, ஆந்திராவுக்கே திரும்பிப்போகும் திட்டத்தில் இருந்தாராம். இதுகுறித்து தனது வீட்டு உரிமையாளரிடமும் கூறி வைத்திருந்தாராம். இந்த நிலையில்தான் அவர் மரணத்தைச் சந்தித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications