மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை தோல்வி.. நாடு முழுக்க ஜூலை 29 முதல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!
டெல்லி: மத்திய அரசுடனான, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி 29ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.
வங்கிகள் தனியார் மயமாக்கலைக் கண்டித்தும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதிலும், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் 4 துணை வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி ஹைகோர்ட் வேலை நிறுத்தத்திற்கு தற்காலிக தடை விதித்தது. இதனால், வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 29
எனவே, ஜூலை 29ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
இதையடுத்து, ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த மத்திய தொழிலாளர் நல ஆணையர் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

போராட்டம்
இதுகுறித்து டெல்லியில், இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: மத்திய அரசுடனான, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி 29ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

10 லட்சம் ஊழியர்கள்
நாடு முழுவதும் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications