ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்யலாம் - பார் கவுன்சில் வலியுறுத்தல்
சென்னை: உயர் நீதிமன்றம் அறிவித்த புதிய விதிகளை ஏற்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்யலாம் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சென்னையில் கடந்த 6 ஆம் தேதி பேரணி நடத்தினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கறிஞர்களுக்கான சட்ட விதிகளில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சட்டத் திருத்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்களின் கருத்துகளை தலைமை நீதிபதியிடம் முறைப்படி தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சில வழக்கறிஞர்கள், சட்ட திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கங்கள் மூலமாக போராட்டங்களை நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் நீதித்துறை சார்ந்த பணிகளை விடுத்து, வேறுவிதமான தேவையற்ற இடையூறுகளை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே நேரடியாக நடவடிக்கை எடுககும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம்












Click it and Unblock the Notifications