கண்ணீர் விட்ட ஜனாதிபதி.. ஒற்றைக் காலில் பைக்கில் நின்ற பெண் போலீஸ்.. குடியரசுத் தினத்தில் நெகிழ்ச்சி
டெல்லியில் நடந்த குடியரசுத் தின விழாவில் நிறைய அணிவகுப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: டெல்லியில் 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி மட்டும் இல்லாமல் சென்னை, மும்பை, கொல்கத்தா என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட அணிவகுப்புகள் பார்க்கவே கண்ணை கவரும் வகையில் இருந்தது. ராணுவம், போலீஸ் ஆகியோர் சாகச அணிவகுப்பு நடத்தினார்கள்.
இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. பல உணர்ச்சிகரமான சம்பவங்களும் நடந்து இருக்கிறது.
|
பெண்
இதில் பெண் எல்லை பாதுகாப்பு படை சேர்ந்தவர் பைக்கில் கெத்தாக பயணித்தார். பெரிய பைக்கில் நின்று கொண்டு அதை அசால்ட்டாக பேலன்ஸ் செய்தார்.
|
டிஜிட்டல்
டிஜிட்டல் இந்தியா குறித்து விழிப்புணர்வு செய்ய இவர் இப்படி செய்துள்ளார். இவர் தனக்கு அருகில் லேப்டாப் வைத்துக் கொண்டே பைக் ஒட்டி இருக்கிறார்.
|
எவ்வளவு தூரம்
இந்த அணிவகுப்பு மொத்தமாக 8 கிமீட்டர் வரை நீண்டு இருக்கிறது. பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ராஜவீதியில் இருந்து விழா நடக்கும் வரை அணிவகுப்பு சென்றது.
|
குடியரசுத் தலைவர்
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் 'கார்ப்பரால் நீராலா' என்ற விமானப்படையை சேர்ந்த வீரரின் குடும்பத்திற்கு அசோகா சக்ரா விருது அளித்தார். 6 தீவிரவாதிகளை வீழ்த்தி இவர் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை கொடுக்கும் போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கண்ணீர் வடித்தார்.












Click it and Unblock the Notifications