டெல்லியில் பெல்ஜியம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓலா டாக்சி டிரைவர் கைது
டெல்லி: டெல்லியில் 23 வயது பெல்ஜியம் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓலா டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெல்ஜியத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பணி முடிந்து சனிக்கிழமை இரவு ஓலா டாக்சியில் குர்காவ்னில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். டாக்சியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வாரை சேர்ந்த ராஜ் சிங் என்பவர் ஓட்டியுள்ளார்.
சிறிது தூரம் சென்ற பிறகு ஜிபிஎஸ் வேலை செய்யவில்லை அதனால் தனக்கு வழிகாட்டுமாறு டிரைவர் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து டிரைவருக்கு வழிகாட்ட அந்த பெண் டிரைவருக்கு அருகில் உள்ள சீட்டில் வந்து அமர்ந்துள்ளார்.
அவர் முன் சீட்டில் வந்து அமர்ந்ததும் ராஜ் சிங் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். டாக்சியில் இருந்து இறங்கிய அந்த பெண் தெற்கு டெல்லியில் உள்ள சி.ஆர். பார்க் காவல் நிலையத்திற்கு சென்று ராஜ் சிங் மீது புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ் சிங்கை கைது செய்துள்ளனர்.