மமதா மாநிலத்தில் 13 வயது பழங்குடியின சிறுமி 3 பேரால் பாலியல் பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 13 வயது பழங்குடியின சிறுமி 3 பழங்குடியின வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பாம் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பழங்குடியின சிறுமி கடந்த வியாழக்கிழமை 3 பழங்குடியின வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்கக் கூடாது என்று கிராமத்தினர் சிறுமியின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவர்கள் நேற்று இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அந்த 3 வாலிபர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
வழக்குப்பதிவு செய்த கையோடு போலீசார் அந்த 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications