பெங்களூர் பாரில் இசைக்கு ஏற்ப நிர்வாண நடனம்.. 37 பேரை வளைத்து பிடித்தது போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இசைக்கு ஏற்ப ஆடை அவிழ்க்கும் கிளப்பில் அதிரடி சோதனை நடத்திய பெங்களூர் போலீசார் 37 பேரை கைது செய்துள்ளனர். வாரி இறைக்கப்பட்ட ரூ.2 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூர் நகரின் மையப்பகுதியில் எம்.ஜி.ரோட்டையடுத்து அமைந்துள்ளது, பீல்டு மார்ஷல் கே.எம் கரியப்பா சாலை. இங்கு டைம்ஸ் பார் மற்றும் ரெஸ்டாரண்ட் என்ற ஹோட்டலில் இசைக்கு ஏற்ப பெண்கள் நிர்வாண நடனம் ஆடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Bengaluru cops find girls performing a striptease

நடனம் ஆடும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்து விட்டு இறுதியில் அந்த பெண்கள் முழு நிர்வாணமாக ஆடுவது வழக்கமாம். அப்படி ஆடும் பெண்கள் மீது சந்தோஷப்பட்டு, கூடியிருக்கும் பணக்காரர்கள், பணத்தை வீசுவார்கள்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, பெண்கள் மீது வீசப்பட்டு, தரையில் கிடந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பாரில் நடனம் ஆடிக் கொண்டு இருந்த நேபாளம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 77 பெண்கள் மீட்கப்பட்டனர். வறுமையில் இருக்கும் பெண்களை வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி அழைத்து வந்து பார்களில் இதுபோன்ற நடனம் ஆட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாரின் உரிமையாளர் கங்காஷெட்டி இவரது கூட்டாளிகள் ஓம்பிரகாஷ் யாதவ், வனிதா, சாந்தி ஸ்வரூப், தனேந்திரா, சையத் சமீர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+