பெங்களூருவில் அடாவடி ஆட்டோ டிரைவர்களை மடக்கி பிடிக்க சுற்றி திரியும் 400 'ஜேம்ஸ்பாண்டுகள்'!
பெங்களூரு: அதிக கட்டணம் வசூலிப்பது, கூப்பிட்ட இடத்துக்கு செல்ல மறுப்பது போன்ற அடாவடியில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, 400 டிராபிக் போலீசாரை மஃப்டியில் களமிறக்கியுள்ளது பெங்களூரு காவல்துறை.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையம், கன்டோன்மென்ட் ரயில் நிலையம், மெஜஸ்டிக் மத்திய பஸ் நிலையம், சாந்திநகர் பஸ் நிலையம் போன்றவற்றுக்கு, தினமும் அதிகாலையிலேயே வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்குவது வழக்கம்.

வெளி மாநில பயணிகளுக்கு பாதிப்பு
இவ்வாறு வரும் பயணிகளிடம் அநியாய கட்டணம் வசூலிக்கும் செயலில் ஆட்டோ டிரைவர்கள் பலர் ஈடுபடுகின்றனர். மேலும், தங்களுக்கு வசதிப்படாத இடத்துக்கு வரவும் மறுத்துவிடுகிறார்கள். இதனால் பெங்களூரு குறித்த அனுபவம் இல்லாத பல வெளிமாநில பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாலை ஆபரேசன்
ஆட்டோ டிரைவர்கள் மீதான புகார்கள் அதிகரிப்பதை தொடர்ந்து பெங்களூரு நகர காவல்துறை அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. காலை 5 மணி முதல் 10 மணிவரை நகரின் முக்கியமான பகுதிகளில் மஃப்டியில் போலீசாரை ரோந்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ள போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

முக்கிய இடங்களில் முகாம்
அதன்படி மெஜஸ்டிக், சிட்டி ரயில் நிலையம், சிவாஜிநகர், சாந்திநகர், பீன்யா, யஷ்வந்த்பூர் பஸ் நிலையங்கள், கன்டோன்மென்ட் ரயில் நிலையம், மடிவாளா செக்போஸ்ட், ஃபோரம் மால், டெய்ரி சர்க்கிள் போன்ற முக்கியமான சந்திப்புகளில் மஃப்டியில் போலீசார் சுற்றிவருகின்றனர்.

வரலைன்னா அபராதம்
சாதாரண உடையில், கையில் சூட்கேசுடன் பயணிகளை போல சுற்றும் இந்த போலீசார், ஏதாவது ஒரு பகுதியின் பெயரை சொல்லி அங்கு வருமாறு ஆட்டோ டிரைவர்களை கூப்பிடுகிறார்கள். அவ்வாறு ஆட்டோ டிரைவர்கள் வந்து விட்டால் ஓகே. வரமுடியாது என்று கூறிவிட்டால் அடுத்த நொடியே போலீஸ் தனது சுயரூபத்தை காண்பித்துவிடும். ஆட்டோ டிரைவர் அபராதம் கட்ட வேண்டிவரும். அபராதம் கட்ட பணமில்லை என்று டிமிக்கி கொடுத்தாலோ, ஆட்டோவே பறிமுதல் செய்யப்படும்.

1200 ஆட்டோக்கள் பறிமுதல்
கடந்த 22ம்தேதி முதல் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக 400 போலீசார் மஃப்டியில் சுற்றிதிரிகின்றனர். இதுவரை 1200 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6700 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டு.. ஸ்டிர்க்டு..
போலீசாரின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளபோதிலும், எதிர்பார்த்தபடியே ஆட்டோ டிரைவர்கள் கோபமடைந்துள்ளனர். சுமார் 100 ஆட்டோ டிரைவர்கள் இணைந்து பெங்களூரு மேற்கு மண்டல டிராபிக் போலீஸ் துணை கமிஷனர் கிரீஷை சந்தித்து, ஆட்டோக்களை பறிமுதல் செய்திருக்க கூடாது என்று வாதிட்டனர். ஆனால் ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காத துணை கமிஷனரோ, அபராதத்தை கோர்ட்டில் செலுத்தினால் மட்டுமே ஆட்டோக்கள் திருப்பி அளிக்கப்படும் என்று கூறிவிட்டார்.

சென்னை எப்படி?
இந்த மாதிரி சென்னையிலும் சோதனை நடத்தலாம்தானே? இங்குதான் மீட்டரே பொருத்துவதில்லையே, அப்புறம் எப்படி மீட்டருக்கு மேல் பணம் கேட்டால் தெரியும் என்கிறீர்களா?
-
அடுத்த பாண்டிச்சேரியாக மாறும் பெங்களூர்! பீர் விலை அப்படியே குறையுது.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications