இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள்.
காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன.

புறநகர் ஏரியா
குறிப்பாக, சர்ஜாப்பூர் ரோடு, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, எலஹங்கா, பன்னேருகட்டா ரோடு போன்ற பகுதிகளில், அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள், போர்வெல்லை மட்டுமே நம்பியுள்ளன. போர்வெல்லில் நீர் காலியானால் புதிதாக தோண்டுகிறார்கள், அல்லது தனியார் வாகனங்களை கொண்டு தண்ணீரை நிரப்புகிறார்கள்.

எப்படி இருந்த ஊரு
1980களில் 30 அடியிலேயே தண்ணீர் கிடைத்துவந்தது பெங்களூரில். ஆனால், தற்போது 1000 அடிக்கு மேல் போர்வெல்கள் போடப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

10 வருடங்கள்
பெங்களூரு நகரின் நிலை குறித்து கர்நாடக முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் வி.பாலசுப்ரமணியன் நடத்திய ஆய்வில் பெங்களூரு நகரில் தற்போதுள்ள குடிநீர் தட்டுப்பாடு மேலும் தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீரின்றி மக்கள், கூட்டமாக வெளியேறும் நிலை உருவாகும் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

அருகாமைக்கும் பாதிப்பு
நிலத்தடி நீரை அதிகப்படுத்தாவிட்டால் 2025ம் ஆண்டுக்கு பிறகு பெங்களூர் மக்களுக்கு பெரும் பிரச்சினை என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இதன்பாதிப்பு பெங்களூரின் அருகிலுள்ள தும்கூர், கோலார், சிக்பள்ளாப்பூர், ராம்நகர் போன்ற நகரங்களிலும் எதிரொலிக்கிறது.

தீர்வுகள்
பெங்களூர் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு ரூ.1000 கோடியில் குடிநீர் கொண்டுவரும் எத்தினஹொலே திட்டத்தை ஒரு சாரார் எதிர்த்து போராட்டம் நடத்திவருவதால் இன்னும் திட்டம் நிறைவேறவில்லை. அந்த திட்டம் நிறைவேறினாலும், பெங்களூருக்கு, காவிரியில் இருந்து கூடுதல் பங்கு கேட்டால் மட்டுமே பெங்களூர் தப்பிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications