எம்.பி.ஏ. மாணவர் உள்பட 3 தீவிரவாதிகளை கைது செய்த பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: இந்தியன் முஜாஹிதீன், தெஹ்ரீக் இ தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய அன்சாருல் தவ்ஹீத் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் சுல்தான் அர்மாரின் ஆட்களான எம்.பி.ஏ. மாணவர்கள் உள்பட 3 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த 3 பேரிடமும் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார்.

கைது
செய்யது இஸ்மாயில் அபாக்(34), சதாம் ஹுசைன்(35) மற்றும் அப்துஸ்ஸுபுர் என்ற 24 வயது எம்.பி.ஏ. மாணவர் ஆகியோரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த தகவலை வைத்து பெங்களூர் காக்ஸ் டவுனில் உள்ள ஒரு வீடு மற்றும் பட்கலில் சோதனை நடத்தியபோது குண்டுகள் தயாரிக்கத் தேவையான அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் டைமர்கள், பிவிசி பைப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணை
அந்த 3 பேரின் நோக்கம் என்ன என்பது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அந்த 3 பேரும் பட்கலைச் சேர்ந்த ஆனால் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அர்மாருடன் தொடர்பில் இருந்தது தெளிவாகத் தெரிகிறது என்று கமிஷனர் ரெட்டி தெரிவித்துள்ளார். அர்மார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications