பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத கனமழை!
பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத கனமழை கொட்டியுள்ளது.
பெங்களூரு: 115 ஆண்டுகளுக்குப் பின் பெங்களூருவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது.
பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது மழை. பின்னர் மெதுமெதுவாக உச்சகட்ட ஆக்ரோஷத்துடன் இடைவிடாது கொட்டித் தீர்த்தது.

115 ஆண்டுகளுக்கு பின் வரலாறு
பெங்களூருவில் சனியன்று மொத்தம் 1540 மி.மீ. மழை பதிவானது. கடந்த 2005-ம் ஆண்டு பதிவானது 1606 மி.மீ. இது கடந்த 115 ஆண்டுகளுக்குப் பின் பெய்த கனமழையாகும்.

பேய்மழை கொட்டியது
இப்பெருமழையால் பெங்களூரு நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இடிமின்னலுடன் கொட்டிய இந்த பேய்மழை ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் பாய்ந்தோடியது.

கனமழையால் வெள்ளம்
பெங்களூரு மேற்கு பகுதியில்தான் கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

வானிலை மையம் எச்சரிக்கை
அரபிக் கடல் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கர்நாடகா உள் மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு பகுதிகளில் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications