தென்னிந்தியாவின் மிகவும் மாசடைந்த நகரம் பெங்களூர்: ஷாக் ரிப்போர்ட்
பெங்களூர்: தென்னிந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் பெங்களூர் என்பது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.
உலகில் மாசடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார அமைப்பு. உலகிலேயே ஈரானில் உள்ள ஜபோல் நகரம் தான் மிகவும் மாசடைந்த நகரம் ஆகும். அதன் பிறகு குவாலியர், அலகாபாத், பாட்னா, ராய்பூர் ஆகிய இந்திய நகரங்கள் உள்ளன.
காற்றில் உள்ள மாசால் மக்களுக்கு பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் வரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் காற்று மாசால் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மாசடைந்த நகரங்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் லூதியானா, கான்பூர், பிரோசாபாத், லக்னோ ஆகிய இந்திய நகரங்கள் உள்ளன. தென்னிந்தியாவின் மிகவும் மாசடைந்த நகரம் பெங்களூர் ஆகும்.
பெங்களூருக்கு அடுத்தபடியாக மாசடைந்துள்ள தென்னிந்திய நகரம் ஹைதராபாத் என்பது குறிப்பிடத்தக்கது.