டிராபிக் விதிமுறை மீறல்: பெங்களூருவில் ஒரேநாளில் 16 ஆயிரம் வழக்கு பதிவு, 253 பைக் பறிமுதல்!
பெங்களூரு: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒருநாள் முன்பாக பெங்களூருவில் டூவீலர் வாகன ஓட்டிகளிடம் போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளின்போது, விதிமுறைகளை மீறியதாக 16 ஆயிரத்து 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிகமான டூவீலர்களை கொண்ட நகரம் பெங்களூரு. அதற்கேற்ப டூவீலர் ஓட்டிகள் வாகன விதிமீறலில் ஈடுபடுவதும் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற வாகன விதிமீறல்கள் அதிகம் என்பதால் கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளில் பெங்களூரு போக்குவரத்து போலீசார் நகரமெங்கும் சிறப்பு சோதனைகளை நடத்தினர்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், விதிமுறை மீறியதாக 16 ஆயிரத்து 475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடைபாதையில் வாகனம் ஓட்டியது, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியது, சிக்னலை மதிக்க தவறியது, ஒருவழிப்பாதையில் வாகனத்தை இயக்கியது, ஹெல்மெட் அணியால் சென்றது, 3 பேரை ஏற்றிச் சென்றது போன்ற பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் அபராதம் செலுத்த தவறியவர்களிடமிருந்து மொத்தம் 253 டூவலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 148 பேரிடம் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மைசூரு ரோடு, பேட்டராயனபுரா, விஜயநகர், காமாட்சிபாளையா உள்ளிட்ட சரகங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில்தான் அதிகபட்சமாக 4695 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications