தனது செல்போனை எடுத்து பார்த்த கணவனின் கையில் கத்தியால் குத்திய மனைவி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் தனது செல்போனை எடுத்துப் பார்த்த கணவனின் விரல்களை பெண் ஒருவர் கத்தியால் கிழித்துள்ளார்.

பீகாரை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் சிங். அவரது மனைவி சுனிதா சிங். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட் அருகே இருக்கும் கைகொண்டனஹள்ளியில் வசித்து வருகிறார்கள்.

Bengaluru woman slashes husband's fingers for checking her phone

பிரகாஷ் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சுனிதா அண்மையில் தான் வேலையை ராஜினாமா செய்துள்ளார். சுனிதா எப்பொழுது பார்த்தாலும் செல்போனும், கையுமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ம் பணி முடிந்து இரவு 11 மணிக்கு பிரகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். சுனிதாவிடம் சாப்பாடு கேட்டதற்கு சமைக்கவில்லை, ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன் வந்துவிடும் என்று கூறிவிட்டு செல்போனில் பிசியாகிவிட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பிரகாஷ் கடுப்பாகி அப்படி என்ன எப்பொழுது பார்த்தாலும் செல்போன் அதில் என்ன தான் இருக்கு என்று நானும் பார்க்கிறேன் என்று கூறி அதை பறித்துப் பார்த்தார்.

செல்போனை பறித்தவுடன் சமையல் அறைக்கு சென்ற சுனிதாவை பிரகாஷ் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுனிதா கத்தியை எடுத்து தனது கணவனின் வலது கை விரல்களை கிழித்துவிட்டார்.

இது குறித்து கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரோ அவர்களை சமாதானம் செய்து வைக்க வருமாறு அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+