எங்களது குடும்பமும் உளவு பார்க்கப் பட்டது... பகத்சிங் குடும்பத்தாரும் திடுக் புகார்!
டெல்லி: நேதாஜியின் குடும்பத்தாரை காங்கிரஸ் உளவு பார்த்ததாக எழுந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே, பகத் சிங் குடும்பத்தார் தாங்களும் உளவு பார்க்கப் பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவுப்படி உளவுத்துறையினர் கிட்டத்தட்ட 20 வருடம் உளவு பார்த்த விவகாரம் சமீபத்தில் அம்பலமானது.

நேருவுக்குப் பின்னால் வந்த காங்கிரஸ் அரசுகளும் இந்த உளவு பார்த்தலைத் தொடர்ந்து வந்ததாகவும், உளவுத்துறையின் ரகசிய ஆவணத்தில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்தப் பரபரப்பு ஓய்வதற்கு முன்னதாகவே, பகத் சிங் குடும்பத்தாரும் தங்களது நடவடிக்கைகள் உளவு பார்க்கப் பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பகத்சிங்கின் தம்பி மகன் அபய் சிங் சந்து கூறுகையில், ‘எங்களது குடும்பமும் பல ஆண்டுகளாக உளவு பார்க்கப் பட்டது. எங்களது போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பகத் சிங்குடன் இணைந்து செயல்பட்ட அஜித் சிங் என்ன ஆனார் என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications