பாவனாவுக்கு பாலியல் தொல்லை.. மேலும் ஒரு குற்றவாளி கைது!
சார்லி என்பவர் கொச்சி, பனங்காடு பகுதியில் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

நடிகை பாவனா சமீபத்ததில் கொச்சி அருகே ஓடும் காரில் சுமார் 2 மணி நேரம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உட்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர். ஏராளமானோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பல்சர் சுனில் கொடுத்த தகவலின்பேரில் அவரின் நண்பரான சக குற்றவாளி சார்லி என்பவர் கொச்சி, பனங்காடு பகுதியில் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications