ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரும் மனு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரிய அன்பழகன் மனு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேலேமுறையீட்டு வழக்கில் இருந்து அரசு வக்கீல் பவானிசிங்கை நீக்க கோரிய மனு கர்நாடக தலைமை நீதிபதி வகேலா அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் வகேலா இதேபோன்ற மனுவை முன்பொருமுறை விசாரித்துள்ளதால், வேறு அமர்வுக்கு மாற்ற கோரியது பவானிசிங் தரப்பு.
இதை வகேலா தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டு, வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டது. வேறு அமர்வில் நீதிபதி என்.குமார் மற்றும் பி.வீரப்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமர்வு விசாரணையை கடந்த இரு தினங்களாக நடத்தி வருகிறது.

பவானிசிங்கை லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்ததாக அன்பழகன் தரப்பு கோர்ட்டில் தெரிவித்திருந்தது, ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை என்பதை அதில் குறிப்பிடவில்லை. எனவே, பவானிசிங்கை நியமித்தது, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையா அல்லது கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறையா என்பதை தெளிவுபடுத்துமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இன்று வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை எந்த மாநில அரசு நடத்துகிறது என்பதை வெளிவுபடுத்தவும், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனம் எப்படி தவறானது என்பதை தெளிவுபடுத்தவும் அன்பழகன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications