ஜெ. மேல்முறையீடு விசாரணையில் பவானிசிங் ஆஜராக முடியுமா? முடியாதா?: நாளை தீர்ப்பு
பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராக முடியுமா, முடியாதா என்பது குறித்த தீர்ப்பு நாளை வெளியாகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்துவருகிறது.

சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார். அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டுகிறது திமுகவின் அன்பழகன் தரப்பு. மேலும், பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்பதும் அன்பழகன் தரப்பு வாதம். எனவே பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.
நீதிபதிகள் குமார், வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. ஜெயலலிதா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பவானிசிங் ஆஜராவது சட்டவிரோதம் என க. அன்பழகன் தரப்பு வாதம் செய்தது. அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வி.நாகேஷ் வாதிட்டார். விசாரணை நீதிமன்றத்தில் மட்டுமே பவானி ஆஜராக கர்நாடக அரசு அனுமதித்திருந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. வழக்கில் அரசு தரப்பில் பவானி ஆஜராக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நாகேஷ் வாதத்தை முன்வைத்தார்.
பவானிசிங் தரப்பு வழக்கறிஞரோ, இதில் வாதிட பவானிசிங்கிற்கு அனுமதி உள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இதுதொடர்பான தீர்ப்பை புதன்கிழமை (நாளை) வழங்குவதாக அறிவித்தனர்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications