ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான விசாரணை.. வேறு அமர்வுக்கு திடீர் மாற்றம்!
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகும் பவானிசிங்கை, நீக்கம் செய்ய க.அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக தலைமை நீதிபதி வகேலா அமர்வு முன்னிலையில், அன்பழகன் ரிட் மனு மீதான விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணை நடத்திய வகேலா பெஞ்ச், அரசு வக்கீலாக பவானிசிங்கை நியமிக்கும் அதிகாரம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உள்ளதா, இல்லையா என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. பவானிசிங் தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் கூட இதில் பதிலளிக்க அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று மீண்டும் விசாரணை தொடர்ந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பிலும் பதில் தாக்கல் செய்யப்பட்டது. பவானிசிங் தரப்பிலும் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

பவானிசிங் தரப்பில் ஆஜரான வக்கீல் "ஏற்கனவே, ஒருமுறை பவானிசிங்கை நீக்க கோரிய அன்பழகன் மனுவை வகேலாதான் விசாரித்தார். அப்போது பவானிசிங்கை நீக்க உத்தரவிட்டார். இப்போது ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீட்டு மனு நடந்து வருகிறது. அன்பழகன் தரப்பில் இப்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ரிட் தாக்கல் செய்துள்ளனர். மீண்டும் வகேலா தலைமையிலான பெஞ்ச் இதை விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே இதேபோன்ற கோரிக்கையை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி வகேலா என்பதால், இப்போதும் அவரே விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தார்.
இதை வகேலா தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டு, வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டது. வேறு அமர்வில் இடம்பெறப் போகும் நீதிபதிகள், யார்-யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பு வெளியான பிறகு வழக்கு என்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் தெரியவரும். அனேகமாக இவ்வார இறுதிக்குள் மீண்டும் வேறு அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications