பெரும் குழப்பம் தீர்ந்தது.. சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு!
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
சட்டீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான 15 வருட ஆட்சியை காங்கிரஸ் அகற்றி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 90 இடங்களில் 68 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 5 தொகுதிகளில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

பெரும் திணறல்
ஆனால் கடந்த 4 நாட்களாக அங்கு காங்கிரஸ் கட்சி முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வந்தது. சட்டீஸ்கரில் தம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முதல்வர் போட்டியில் இருந்தனர்.

முக்கியமான நபர்கள்
மூன்று பேரும் முக்கியமான நபர்கள் என்பதால் யாரை தேர்வது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் குழம்பியது. அதேபோல் உறுப்பினர்கள் ஆதரவும் மூன்று பேருக்கும் கிட்டத்தட்ட சமமாக இருந்தது. அங்கு முதல்வரை தேர்வு செய்ய நான்கு முறையும் மேல் கூட்டம் நடத்தப்பட்டது.

ராகுல் காந்தி
அதன்பின் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் செய்யப்பட்டது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் முடிவு ஒப்படைக்கப்பட்டது. ராகுல் காந்தி சட்டீஸ்கர் முதல்வரை தேர்வு செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் ராகுல் காந்தி ம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோரை அழைத்து இரண்டு முறை சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

முதல்வர்
இந்த நிலையில் தற்போது சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் என்று பதவி ஏற்பார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் 15 வருடத்திற்கு பின் சட்டீஸ்கரில் ஆட்சி செய்ய போகும் காங்கிரஸ் முதல்வர் என்று பெருமையை பூபேஷ் பாகல் பெறுகிறார். அவரது ஆதரவாளர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications