வீடு வாங்குவது இனி ரொம்ப “ஈசி”- ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றம்
டெல்லி: ராஜ்யசபாவில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேறியுள்ளதனையடுத்து இம்மசோதா வீடு வாங்க இருப்பவர்களுக்கு பல்வேறு வகையிலும் சாதகமாக அமைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் மசோதா கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அறிமுகமானது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மசோதாவில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக இரண்டு மாற்றங்கள் இதில் முக்கியமானவை. வீடு வாங்குபவர்கள் முன் பணமாக 70 சதவீதப் பணத்தைத் தர வேண்டும் என்று முன்பு இருந்தது. அதை 50 சதவீதமாகக் குறைப்பது இந்த மாற்றங்களில் ஒன்று. இதேபோல வீடுகள் கட்டும் நிறுவனங்களை மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வர்த்தகக் கட்டுமான நிறுவனங்களையும் இந்த வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
இதன்மூலம் நிறுவனங்கள் கட்டுமானத்துக்கு தனி வங்கி கணக்கு துவங்கி அதன்மூலமாகவே கட்டுமான பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனால் இத்துறையில் கருப்பு பண புழக்கம் தடுக்கப்படுவதோடு, செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும்.
இந்த துறையில் விதிமீறலில் ஈடுபடும் புரோமோட்டருக்கு 3 ஆண்டு வரையும், முகவர்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கு ஓராண்டு வரையும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
ஆனால், இந்த மசோதா கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமானது என்றும், வீடு வாங்கும் நடுத்தர மக்களுக்கு பாதகமானது என்றும் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது.
இதனையடுத்து எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் பல்வேறு முயற்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டது. அதில் நிறைவேறாமல் உள்ள சில மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
இந்த சட்டமானது வீடுகள் வாங்குவோர்களை பல்வேறு ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் இருந்து பாதுகாக்கவும், வெளிப்படைத் தன்மையுடன் விற்பனை நடைபெறவும் உதவும். நீண்ட இழுபறிக்கு பின் ரியல் எஸ்டேட் திருத்த மசோதா நிறைவேறியுள்ளது வீடு வாங்குவோர் மத்தியில் நிலவி வந்த சிக்கலுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications