இந்தி மொழி எங்கே? ஆங்கில போர்டை பார்த்ததும் அதட்டிய நிதிஷ் குமார்! ஆடிப்போன அதிகாரி! பரபர பின்னணி
பாட்னா: ‛இந்தி மொழி எங்கே.. இந்தி தான் எங்க மொழி. இந்தி மொழிக்கு முக்கியத்துவத்தை அழிக்க பாக்குறீயா??' எனக்கூறி ஆங்கில மொழியில் வைக்கப்பட்ட பேனரை அகற்றும்படி அதிகாரிகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான இவர் முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்.

அதன்பிறகு பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மீண்டும் முதல்வராகி ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் தான் பீகார் மாநிலத்தில் உள்ள பாங்கா பகுதியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்வர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைத்தார்.
இந்த வேளையில் டிஜிட்டல் நூலகத்தின் பெயர் என்பது ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பீகார் மாநில மக்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அங்கு இந்தி என்பது அலுவல் மொழியாகவும் இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் டிஜிட்டல் நூலகத்துக்கு ஆங்கிலத்தில் அந்த போர்டு அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை கவனித்த முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தனர். உடனடியாக அவர் அதிகாரியை அழைத்து போர்டை மாற்றும்படி கூறினார். மேலும், ‛‛இந்தி மொழியின் எங்கள் மொழி. இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அழிக்க பார்க்கீறியா? எதற்காக இந்தியில் போர்டு வைப்பதற்கு பதில் ஆங்கிலத்தில் வைத்தீர்கள்?. நாம் அனைவரும் இந்தியில் படித்தவர்கள். அதோடு இங்கு நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி இல்லை'' என அதிகாரியை திட்டி கடும் கோபமடைந்தார்.

அதுமட்டுமின்றி உடனே இந்தி மொழியில் போர்டை மாற்றம் வேண்டும் என ஆர்டர் போட்டார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஊழியர்கள் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் நூலகத்தின் போர்டை அகற்றி இந்தி மொழியில் போர்டு வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஆங்கிலத்தில் போர்டு இருப்பதை பார்த்து அதனை இந்தி மொழியில் மாற்றும்படி அதிகாரிகளை நிதிஷ் குமார் கடிந்து கொண்டது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications