Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி மொழி எங்கே? ஆங்கில போர்டை பார்த்ததும் அதட்டிய நிதிஷ் குமார்! ஆடிப்போன அதிகாரி! பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ‛இந்தி மொழி எங்கே.. இந்தி தான் எங்க மொழி. இந்தி மொழிக்கு முக்கியத்துவத்தை அழிக்க பாக்குறீயா??' எனக்கூறி ஆங்கில மொழியில் வைக்கப்பட்ட பேனரை அகற்றும்படி அதிகாரிகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான இவர் முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்.

 Bihar CM Nitish Kumar angry because name board in English instead of Hindi in digital library at Banka

அதன்பிறகு பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மீண்டும் முதல்வராகி ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் தான் பீகார் மாநிலத்தில் உள்ள பாங்கா பகுதியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்வர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைத்தார்.

இந்த வேளையில் டிஜிட்டல் நூலகத்தின் பெயர் என்பது ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பீகார் மாநில மக்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அங்கு இந்தி என்பது அலுவல் மொழியாகவும் இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் டிஜிட்டல் நூலகத்துக்கு ஆங்கிலத்தில் அந்த போர்டு அமைக்கப்பட்டு இருந்தது.

இதனை கவனித்த முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தனர். உடனடியாக அவர் அதிகாரியை அழைத்து போர்டை மாற்றும்படி கூறினார். மேலும், ‛‛இந்தி மொழியின் எங்கள் மொழி. இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அழிக்க பார்க்கீறியா? எதற்காக இந்தியில் போர்டு வைப்பதற்கு பதில் ஆங்கிலத்தில் வைத்தீர்கள்?. நாம் அனைவரும் இந்தியில் படித்தவர்கள். அதோடு இங்கு நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி இல்லை'' என அதிகாரியை திட்டி கடும் கோபமடைந்தார்.

 Bihar CM Nitish Kumar angry because name board in English instead of Hindi in digital library at Banka

அதுமட்டுமின்றி உடனே இந்தி மொழியில் போர்டை மாற்றம் வேண்டும் என ஆர்டர் போட்டார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஊழியர்கள் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் நூலகத்தின் போர்டை அகற்றி இந்தி மொழியில் போர்டு வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஆங்கிலத்தில் போர்டு இருப்பதை பார்த்து அதனை இந்தி மொழியில் மாற்றும்படி அதிகாரிகளை நிதிஷ் குமார் கடிந்து கொண்டது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+