மெல்லும் புகையிலைக்கு வரிவிலக்கு: பீகார் முதல்வர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: மெல்லும் புகையிலை மீதான வரிக்கு விலக்கு அளிக்கப்படுவதாக பீகார் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அதிகளவில் புகையிலை விளைச்சல் நடைபெறும் மாநிலங்களில் பீகாரும் ஒன்று. சில தினங்களுக்கு முன், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்த விவசாயிகள் புகையிலை மீதான மாநில அரசின் வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில், மெல்லும் புகையிலை (Raw Chewing Tobacco) மீதான வரியை ரத்து செய்வதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில், புகையிலை விளைச்சலை ஊக்குவிப்பதற்காக வேளாண்மை துறை பல்வேறு பிரசார திட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications