ஏழையாய் பிரிந்து சென்றார்; தொழிலதிபராய் திரும்பி வந்தார் - ஆச்சரியப்படுத்தும் “அயூப் அன்சாரி”
நவாதா: பீகாரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களின் புனித நாளான ரம்ஜான் அன்று குடும்பத்தை விட்டு பிரிந்தவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெரும் தொழிலதிபராக திரும்பி வந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் நவாதா மாவட்டம், பரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் அயூப் அன்சாரி.

இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தன் 28 ஆவது வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ரம்ஜான் தினத்தன்று காணாமல் போன அயூபை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
காலப்போக்கில் அவரது நினைவுடன், குடும்பத்தினர் வாழ்ந்தனர். இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 28 ஆம் தேதி திடீரென தங்கள் முன் பெரும் தொழிலதிபராக அயூப் வந்து நின்றதைக் கண்டு அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தன்னுடைய உயர்வு குறித்து அயூப், "மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் எப்படியும் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் நினைவு வரும்போது பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தபின் தான் அவர்களை சந்திக்க வேண்டும் என்று என்னை கட்டுப்படுத்திக் கொள்வேன்.
துவக்கத்தில் வாகனங்களுக்கான இருக்கைகள் தயாரிக்கும் கடையில் பணிக்கு சேர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தொழிலை கற்றுக்கொண்டேன். எனக்கு கிடைத்த சம்பளத்தில் சிறுக சிறுக சேர்த்து தனியாக ஒரு நிறுவனத்தை துவக்கி இன்று பெரிய பணக்காரனாகி விட்டேன். ஆனால், அதற்குள் 32 ஆண்டுகாலம் ஓடி விட்டது. பின் என்னுடைய குடும்பத்தினரை பல இடங்களில் தேடி இறுதியில் ரேபரேலியில் கண்டுபிடித்தேன். ஆனால், என் பெற்றோர் இறந்துவிட்டனர். அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியை அளிக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications