ஏழையாய் பிரிந்து சென்றார்; தொழிலதிபராய் திரும்பி வந்தார் - ஆச்சரியப்படுத்தும் “அயூப் அன்சாரி”
நவாதா: பீகாரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களின் புனித நாளான ரம்ஜான் அன்று குடும்பத்தை விட்டு பிரிந்தவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெரும் தொழிலதிபராக திரும்பி வந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் நவாதா மாவட்டம், பரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் அயூப் அன்சாரி.

இவருக்கு மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தன் 28 ஆவது வயதில் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ரம்ஜான் தினத்தன்று காணாமல் போன அயூபை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
காலப்போக்கில் அவரது நினைவுடன், குடும்பத்தினர் வாழ்ந்தனர். இந்நிலையில் 32 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 28 ஆம் தேதி திடீரென தங்கள் முன் பெரும் தொழிலதிபராக அயூப் வந்து நின்றதைக் கண்டு அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தன்னுடைய உயர்வு குறித்து அயூப், "மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் எப்படியும் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் நினைவு வரும்போது பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தபின் தான் அவர்களை சந்திக்க வேண்டும் என்று என்னை கட்டுப்படுத்திக் கொள்வேன்.
துவக்கத்தில் வாகனங்களுக்கான இருக்கைகள் தயாரிக்கும் கடையில் பணிக்கு சேர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தொழிலை கற்றுக்கொண்டேன். எனக்கு கிடைத்த சம்பளத்தில் சிறுக சிறுக சேர்த்து தனியாக ஒரு நிறுவனத்தை துவக்கி இன்று பெரிய பணக்காரனாகி விட்டேன். ஆனால், அதற்குள் 32 ஆண்டுகாலம் ஓடி விட்டது. பின் என்னுடைய குடும்பத்தினரை பல இடங்களில் தேடி இறுதியில் ரேபரேலியில் கண்டுபிடித்தேன். ஆனால், என் பெற்றோர் இறந்துவிட்டனர். அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியை அளிக்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications