பீகாரில் 3 இடங்களில் வெற்றியைப் பெற்ற மாஜி "நக்சலைட்" கட்சி சி.பி.ஐ(மா.லெ) (லிபரேசன்)
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மாஜி நக்சல்கள் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ) (லிபரேசன்) 3 இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி 1967ல் உருவானது. மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து 1969-ல் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) என ஒரு தலைமறைவு நக்சலைட் இயக்கமாக மஜூம்தார் தலைமையில் உருவானது.

பின்னர் இதில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ.) (லிபரேசன்) உருவானது. 1975ல் வினோத் மிஸ்ரா இதன் பொதுச்செயலராக பொறுப்பு வருகிறார்..
1980களில் ஐ.பி.எப். (Indian Peoples Front) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட இந்த கட்சி தொடங்கியது. பின்னர் ஐ.பி.எப். கலைக்கப்பட்டு வெவ்வேறு பெயர்களில் பல தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது இந்த கட்சி.
தற்போதைய பீகார் சட்டசபை தேர்தலில் இருக்கிற அத்தனை "இடதுசாரி" கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்(மா-லெ) (லிபரேசன்), பார்வார்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, எஸ்.யூ.சி.ஐ ஆகிய 6 கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
இதில் மாஜி நக்சலைட் கட்சியான சி.பி.ஐ(மா.லெ) (லிபரேசன்) கட்சியின் வேட்பாளர்கள் பலர் சிறைகளில் இருந்தபடி போட்டியிட்டனர். இந்த கட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 இடங்களில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 1.5% வாக்குகளை இந்த மாஜி நக்சலைட் கட்சி பெற்றுள்ளது.
பிரதான இடதுசாரி அரசியல் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் படுதோல்வியைத்தான் சந்தித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.4%; மார்க்சிஸ்ட் கட்சி 0.6% வாக்குகளைத்தான் பெற்றிருக்கின்றன.
இருப்பினும், ஒரு வலுவான இடதுசாரிகள் கூட்டணிக்காக ஒரு தொடக்கமாக இதை கருதுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகிறார். இதே பார்முலாவை மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பின்பற்றவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இடதுசாரிகளின் பிரதான எதிரிகளாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இருக்கும் போது அவர்களை மிக வலுவாக எதிர்க்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளத்துடன் மல்லுக் கட்டியது என்பது பாரதிய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications