பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது செருப்பு வீச்சு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்றுப் பேசிய பொதுக்கூட்டத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பெகுசாராய் மவட்டத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் 'சங்கல்ப்ப யாத்திரை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார்.

அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசிய அவர், பீகாரில் மீண்டும் இருண்டகால ஆட்சியை ஏற்படுத்துவதற்காக லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

Bihar: Slipper thrown at Nitish Kumar at public function in Begusarai

தனது தலைமையிலான மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களை பட்டியலிட்ட நிதீஷ்குமார், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்று, ஜாமினில் விடுதலையான லல்லு பிரசாத் யாதவ்வுக்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்று திரும்பிய தியாகிக்கு இணையான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றார்.

எதிர்க்கட்சிகளை தாக்கி இவ்வாறு காரசாரமாக பேசிக்கொண்டிருந்த போது மேடையின் எதிரே அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் நிதிஷ் குமாரை நோக்கி ஒரு செருப்பை வேகமாக வீசினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமார் சட்டென்று பேச்சை நிறுத்தினார். சிறிது நேரம் செய்வதறியாது திகைத்துப் போய் நின்ற அவர் பிறகு பேச்சைத் தொடர்ந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் முதல்வர் மீது செருப்பை வீசியவர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போன போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+