இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தி குக்கரால் தாக்கிய பிலால் மாலிக்!

இதையடுத்து உள்ளே புகுந்த போலீஸ் படை, லட்சுமணனை மிகவும் சிரமப்பட்டு மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் நேற்று நடந்த பரபரப்புச் சம்பவம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது...
ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தமிழக போலீசார் மற்றும் ஆந்திர போலீசார் இணைந்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்த புத்தூர் பகுதிக்கு விரைந்தனர்.
பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தங்கியிருந்த வீட்டை நேற்று அதிகாலை நாலரை மணிக்கு அடைந்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து பெண் குரல் யார் என்று கேட்டுள்ளது. அதற்கு பால்காரர் என்று லட்சுமணன் கூறயுள்ளார். வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை, பிறகு வாருங்கள் என்று அப்பெண் பதில் கொடுத்துள்ளார்.
அப்போது உள்ளே லைட் போடப்பட்டது. ஒரு ஆண் நடந்து வந்துள்ளார். அவரைப் பார்த்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வருவது பிலால் மாலிக்தான் என்பதை அறிந்து கொண்டார். பிலால் மாலிக்கும் கதவைத் திறந்து பார்த்துள்ளான். அப்போது அவனை வெளியே இழுக்க முயன்றார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். ஆனால் பிலால் மாலிக் சுதாரித்துக் கொண்டு லட்சுமணனை உள்ளே இழுத்து கதவையும் மூடி விட்டான்.
உள்ளே சிக்கிக் கொண்ட லட்சுமணனை பிலால் மாலிக் சரமாரியாகத் தாக்கியுள்ளான். தனது கையில் இருந்த கத்தியால் அவரை தலையில் குத்தியுள்ளான். மேலும் வீட்டில் இருந்த குக்கரை எடுத்தும் பலமாக தாக்கினான்.
இதில் படுகாயமடைந்தார் லட்சுமணன். உயிர் தப்ப அவர் போராட்டம் நடத்த வேண்டியதாகி விட்டது. அவரது குரல் கேட்டு வெளியில் இருந்த போலீஸார் திபுதிபுவென உள்ளே புகுந்தனர். அதற்குள் பிலால் மாலிக் உள்ளே இருந்த அறைக்குள் புகுந்து அதை பூட்டிக் கொண்டான். மேலும் காஸ் சிலிண்டரையும் திறந்து விட்டான். அங்கிருந்த இஸ்மாயிலும் அவனும் வீட்டில் வெடிகுண்டுகள் இருக்கின்றன, வெடிக்க வைத்து விடுவோம் என்று மிரட்டியதால் போலீஸார் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. லட்சுமணனை மட்டும் மீட்டுக் கொண்டுவெளியேறி விட்டனர்.
படுகாயமடைந்துள்ள இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications