”நாங்களும் மதுவைத் தொட மாட்டோம்” .. சத்தியம் செய்த எம்.எல்.ஏக்கள் - பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு!
பீகார்: பீகாரில் மதுவிலக்கு அமலாகியுள்ளதையடுத்து தாங்களும் மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்ற எம்.எல்.ஏக்களால் பெரும் வியப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் நாளை முதல் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக, அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமார் நான் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்ட சபையில் கொண்டு வரப்பட்டது. பீகார் சட்டசபையில் நேற்று குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இனி யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து பீகார் சட்டசபையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை முதல் நாங்கள் குடிக்க மாட்டோம் என்று ஒவ்வொரு எம்.எல்.ஏவும் உறுது மொழி ஏற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் சட்டசபையில் கூறினார். நிதிஷ்குமாரின் வேண்டுகோளை ஏற்று 243 எம்.எல்.ஏக்களும் ஒரு மித்த குரலில் இனி நாங்கள் மது குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
பீகார் மாநிலத்தில் தடையை மீறி யாராவது மது விற்பனை செய்தால் கள்ள சாராயம் காய்ச்சினால் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்து இருப்பதால் அம்மாநிலத்தில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications