மிசோராமில் நடந்த கவுன்சில் தேர்தல்.. கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றும் பாஜக- காங்கிரஸ்!
மிசோராமில் உள்ள தன்னாட்சி பொருந்திய சக்மா மாவட்ட கவுன்சிலை பாஜக கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து நிர்வாகம் செய்ய இருக்கிறது.
மிசோரம்: மிசோராமில் உள்ள தன்னாட்சி பொருந்திய சக்மா மாவட்ட கவுன்சிலை பாஜக கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து நிர்வாகம் செய்ய இருக்கிறது. அங்கு நடந்த கவுன்சில் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் அந்த கட்சிகள் இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
மிசோராமில் உள்ள சக்மா இன மக்களுக்கான இயங்கும் தன்னாட்சி பொருந்திய கவுன்சில்தான் சக்மா மாவட்ட தன்னாட்சி கவுன்சில். அம்மாநில அரசுக்கு நிகரான பலம் கொண்ட இந்த கவுன்சிலில் வெற்றிபெறும் கட்சியே பெரும்பாலும் மாநில தேர்தலிலும் வெற்றிபெறும். மிசோராமில் இதுபோல் மூன்று தன்னாட்சி கவுன்சில்கள் மட்டுமே இருக்கிறது.

இந்த சக்மா கவுன்சிலுக்காக சென்ற வாரம் தேர்தல் நடந்தது. மொத்தம் 20 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. அதில் 19 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு தொகுதிக்கான முடிவு வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது 19 தொகுதியில் பாஜக 5 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 6 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி 8 இடங்களில் வெற்றிபெற்று இருக்கிறது. ஆனால் அங்கு அதிகாரத்தை கைப்பற்ற 11 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இதனால் தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து அங்கு அதிகாரம் செலுத்த உள்ளது. மிசோ தேசிய முன்னணி கட்சி இரண்டு கட்சிகளுடன் கைகோர்க்க முன்வராத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இதற்கு பாஜக தேசிய மேலிடம் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிசோரம் பாஜக நிர்வாகிகள் கட்சியைவிட்டு நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications