சத்தீஷ்கரில் ஷாக்! தேர்தலுக்கு 3 நாளே உள்ள நிலையில்.. பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை
ராய்பூர்: சத்தீஷ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நடைபெற்ற இந்த சம்பவம் சத்தீஷ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் பதவி வகித்து வருகிறார். சத்தீஷ்கரின் சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகள் என இரண்டு கட்டங்களாக சத்தீஷ்கரில் தேர்தல் நடைபெறுகிறது.

சத்தீஷ்கரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளே உள்ளது. சிறிய மாநிலம் என்றாலும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே போட்டி உள்ளது. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். இருப்பினும் பாஜகவும் படுதீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.
பிரதமர் மோடியின் வாக்குறுதிகள் என்ற தலைப்பில் இந்த தேர்தல் அறிக்கை வெளியானது. குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 அதாவது மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும். - அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு ஏழைகள் இலவசமாக சென்று வழிபாடு நடத்தி திரும்புவதற்கு ராம்லல்லா யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் பாஜக இறங்கியுள்ளது. பாஜக உள்ளூர் நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில் படு சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகளால் பாஜக நிர்வாகி ரத்தன் துபே கொல்லப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஷ்கர் மாவட்டத்தில் உள்ள நாரயண்பூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக ரத்தன் துபே பதவி வகித்து வந்தார். நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கௌஷல்கர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது தான் ரத்தன் துபே கொல்லப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. மூத்த போலீஸ் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications