எதியூரப்பாவை மீண்டும் அழைக்கிறது பாஜக!
பெங்களூர்: கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எதியூரப்பாவை பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் சேரும்படி முறைப்படி அழைப்பு விடுக்க அக் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக பொதுச் செயலர் அனந்த் குமார், கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, தேசிய செயற்குழு உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.

கர்நாடக குழுவினர் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். அப்போது, எதியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர அழைப்பு விடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் எதியூரப்பாவும் பாஜகவுடன் சேர விரும்புவதுடன் கட்சி மேலிடம் நேரடியாக அழைக்க வேண்டும் அவர் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, எதியூரப்பாவை அழைப்பது குறித்து மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கிறேன் என்று ராஜ்நாத் சிங் கர்நாடக குழுவிடம் உறுதியளித்திருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications